புதன், 30 செப்டம்பர், 2015

மிக மிக அருமையான தகவல் குறிப்பாய் வாணர்கள் பெருமை சொல்லும் கல்வெட்டு

மிக மிக அருமையான தகவல் குறிப்பாய் வாணர்கள் பெருமை சொல்லும் கல்வெட்டு


Grantha Inscription
The beautiful Naasi koodu of thachchur holds a grantha inscription in it which is the only document that helps to identify the period & name of the temple. Thanks toSankara Narayanan G sir for sharing his Interpretation through a comment earlier in this group. Also i thank French institute of Pondicherry for making this Inscription readable, during their recent field work 2 months ago.
Sanskrit Interpretation:
(Line 1) श्री विष्णोर्बाणकुलाधिपस्य तनया भर्त्तुः पुरोधापतेः(?)
(Line 2) भूनाथस्य पतिव्रता हिमवतः कन्येव धन्या सति(ती*)
(Line 3) पूज्यायाभुवने गुणेधिकतया देव्या तया निर्म्मिते
(Line 4) सान्निद्ध्येन दयावकेश्वरगृहे शंभुश्चिर(न्ति*)ष्ठतु(।)
English Interpretation:
(Line 1) Śrī Viṣhṇor-Bāṇa-kulādhipasya tanayā Bhartuḥ purodhāpateḥ (?)
(Line 2) Bhūnāthasya pativratā himavataḥ kanyeva dhanyā sati(tī । *)
(Line 3) Pūjyāyābhuvane guṇedhikatayā devyā tayā nirmmite
(Line 4) Sānniddhyena Dayāvakeśvaragṛhe Śambhuścira(nti*)ṣṭhatu(।।*)
English Translation:
Śrī. May Lord Śambhu (Siva), dwell for a long time (Ciram Tiṣṭhatu) with his divine presence (Sānnidhyena) in the Dayāvakeśvara-Gṛha, built by queen (Devi) of highest chastity (Pativratā), gloried like the daughter of Himavān (Pārvatī), daughter of the king (Bhūnātha), of Bāṇa race of Viṣṇu, who was the leader of Brahmins (or of leaders) due to excess of good qualities in her.
Courtesy: @Sankara Narayanan G
‪#‎தச்சூர்_நாசிக்கூடு‬: கிரந்தக் கல்வெட்டு
தச்சூர் சிற்பங்களுடன் காணப்படும் நாசிக்கூட்டில், யானையின் தலைமேல் காணப்படுகிறது ஒரு கிரந்தக் கல்வெட்டு (சமஸ்கிரத மொழியின் எழுத்து உருவங்களுக்கு கிரந்தம் என்று பெயர்). இன்றைய நிலையில், தச்சூர் சிவன் கோவிலின் பழங்கால கோவில் கட்டுமானம் இல்லாமையால், இக்கோவில் இறைவனின் பெயர், கட்டுவித்தவர் பெயர் மற்றும் அதன் காலத்தை தெளிவுப் பெறக் கூறும் ஒரே ஆவணம் இக்கல்வெட்டு மட்டும் தான். மேலும் இக்கல்வெட்டினை படிக்கக் கூடிய வகையில் சுத்தம் செய்து பொலிவுடன் விளங்கச் செய்த "பிரெஞ்ச்சு இன்ஸ்ட்டிட்யூட்டின் தொல்லியல் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.
இக்கல்வெட்டு மூலம் இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் "தயாவகேஸ்வரர்" என்றும் கோவிலின் பெயர் "தயாவகேஸ்வர கிருஹம்" என்பதும் இதனைக் கட்டுவித்தவர் விஷ்ணு எனும் வாணர் குல அரசனின் மகள் என்ற முக்கிய தகவல்களைத் தருகிறது. இதனைப் படித்தறிய திரு.@Sankara Narayanan G அவர்களின் சமஸ்கிரத, ஆங்கில விளக்கத்தையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் மேலே கொடுத்துள்ளேன்.
இருப்பினும், இக்கல்வெட்டின் தமிழ் விளக்கமும், அதன் தமிழாக்கமும் தஞ்சை தமிழகத் தொல்லியல் கழகத்தின் 2009ம் ஆண்டு "ஆவணம்" இதழில் (இதழ்-20) புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ட்டிட்யூடை சேர்ந்த திரு. விசயவேணுகோபால் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இக்கட்டுரை, "புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியின் இயக்குனர் திரு.டொமினிக் குடால் அவர்களின் ஆங்கில மொழிபெயற்ப்பின் தமிழாக்கம்" என்ற அடிக்குறிப்பைக் கொண்டுள்ளது.
தமிழ் விளக்கம்:
வரி-1: ஸ்ரீ விஷ்ணோர் பா3ணகுலாதி4 பஸ்ய தநயா ப4(ர்)த்து ரொத4ஹ்பதே(ர்)
வரி-2: பூ4நாத2ஸ்ய பதிவ்ரதா ஹிமவதஹ் கந்யெவ த4ந்யா ஸதீ
வரி-3: பூஜ்யா யா பு4வநெ க3ழாத4 கதயா தெ3வ்யா தயா நிர்ம்மிதெ
வரி-4: ஸாந்நித்4 யெந த3யாவகேஸ்2வர க்3ரஹே ஸ2ம்பு4ஸ்2 சிரந் திஸ்ரஷ்ட4து.
தமிழாக்கம்:
வாண குலத்தலைவன் விஷ்ணுவின் மகள், ஹிமவானின் மகளைப்போல சிறந்தவள், கணவன் ரொத4ய்பதிக்கு(?) ஏற்ற கற்புடை மனைவியால் தன் நற்குணங்கள் மேம்படவும் உலகத்தார் வழிபடவும் கட்டப்பட்ட இத் தயாவகேஸ்வர கோவிலில் ஸம்பு (சிவபெருமான்) நீண்டகாலம் வீற்றிருக்கட்டும்.
ஆதாரம்: "புதிய பல்லவர் கல்வெட்டுகள்", ஆவணம், இதழ்-20, 2009ம் ஆண்டு.
வரலாற்றில் தச்சூர் என்ற பேஸ்புக் பக்கத்தில் அருண்குமார் பங்கஜ் எழுதியது

ஆறகளூரில் 12ஆம் நூற்றாண்டை நேர்ந்த சமண கோயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு தினமணி செய்தி

15-09-2015 அன்று ஆறகளூரில்12ஆம் நூற்றாண்டில் சமண கோயில் இருந்ததற்கான கல்வெட்டை நான் கண்டுபிடித்தது தொடர்பான செய்தி தினமணி நாளிதழில் வெளிவந்துள்ளது..அதன் லிங்
தலைவாசல் அருகே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சமணக்கோயில் கல்வெட்டு கண்டெடுப்பு
By ஆத்தூர்,
First Published : 15 September 2015 05:09 AM IST
தலைவாசல் அடுத்துள்ள ஆறகளூர் பகுதியில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோயில் இருந்ததற்கான கல்வெட்டை சனிக்கிழமை வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் என்பவர் கண்டெடுத்துள்ளார்.
தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் பழம்பெருமை வாய்ந்தது. இங்கு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருகாமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. எட்டு பைரவர்களும் ஒரே கோயிலில் அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. மேலும் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரி வரதராஜப் பெருமாள் கோயிலும் இங்குள்ளது. ஆறகளூருக்கு அருகே உள்ள தியாகனூரில் தமிழகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலையும் அதைவிட சற்று உயரம் குறைந்த மற்றொரு புத்தர் சிலையும் உள்ளன.
11-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநில மன்னர் மகதை மண்டலம் என்ற நாட்டை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் குறுநில மன்னவராகவும் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகவும் பணியாற்றியவர். இவரின் கல்வெட்டுக்கள் ஆறகளூர், கூகையூர், திருவண்ணாமலை, சிதம்பரம் மற்றும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது.
கடந்த வாரம் வரலாற்று ஆய்வாளர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆறகளூர் பகுதியில் வணிகக் குழு கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்த வணிகக்கல் 2 அடி உயரத்திற்கு மட்டுமே வெளியில் தெரிந்தது. இந்தக் கல்வெட்டின் கீழ் எழுத்துக்கள் இருக்கலாம் என்று எண்ணியதால் ஊர்ப் பொதுமக்கள், ஆறகளூர் மகதை மண்டலம் நண்பர்கள் என்ற வே.சந்தோஷ், ஆர்.வேலு, ர.அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழு கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டைத் தோண்டி எடுத்தபோது அதில் 8 வரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சமணக்கோயில் (ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால் கல்வெட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. அக்கோயில் மன்னன் பெயரிலும் வணிகர் பெயரிலும் இணைந்து பொன்பரப்பின பெருமாள் ஜிநாலயமான என்று அந்த சமண பள்ளிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வணிகக் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகே வயலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தின் சுடுமண் பொம்மையின் உடைந்த பகுதி கிடைத்துள்ளது. இப்போது விளைநிலமாக உள்ள இந்தப் பகுதி சங்க காலத்திலேயே மக்கள் வாழ்ந்த குடியிருப்பு என இதனால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு ஆது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 12-ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய மதங்கள் ஆறகளூரில் சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது என வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் கூறினார்.

ஆறகளூர் பற்றிய தினத்தந்தி செய்தி



ஆறகளூர் பற்றி நான் கொடுத்த தகவல்கள் நேற்று 29-09-2015 தினத்தந்தி நாளிதழில்


நேற்றைய தினத்தந்தி நாளிதழில் சமண கோயில் இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு மற்றும் ஆறகளூர் வரலாறு பற்றி நான் கொடுத்த தகவல்கள் வெளி வந்திருக்கு..
http://www.dinathanthiepaper.in/firstpage.aspx

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூர் பகுதியில் அவுரி சாய தொழிற்சாலை

ஆறகளூர் பகுதியில் அவுரியில் இருந்து சாயம் எடுக்கும் ஆங்கிலேயர் கால சிறிய அளவிலான தொழிற்சாலை

-----------------------------------------------------------------










ஆறகளூர் அருகே உள்ளது இந்திரா நகர் இங்கு ஆங்கிலேயர் காலத்து அவுரியில் இருந்து சாயம் எடுக்க பயன்பட்ட இடத்தை இன்று காலையில் பார்த்தேன்..சிதிலமடைந்து இப்போது யாரும் பயன்படுத்தாத நிலையில் இந்த இடம் உள்ளது..
அவுரி பற்றி சில தகவல்கள் (இணையத்தில் எடுத்தது)
நீலி என சமஸ்கிருதத்திலும் சென்னா என ஆங்கிலத்திலும் அறியப்படும . அவுரி எனும் குறுந் செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் அதிகம் பயிராகும் தாவரமாகும் . வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும்.
சுமார்ஐம்பதுஆண்டுகளுக்குமுன்வரை விளை நிலங்களில் ,நெல் அறுவடைக்குப் பின் ,அதில் அவுரி பயிரிட்டு பின் தண்ணீர் வந்து உழ ஆரமிக்கும் போது அவுரியையும் சேர்த்து உழுவார் .அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம் மட்டுமல்ல ,அவுரி 18 வகை நஞ்சை நீக்கும் குணம் படைத்தது ஆதலால் அது நிலத்தில் இருக்கும் சேர்ந்து விட்ட நஞ்சை நீக்கிவிடும் .அதில் விளையும் உணவினை உண்ணும் மக்களும் உரமாக இருந்தனர் .ஆனால் இப்போதெல்லாம் செயற்கை உரம் போடுவதால் மனிதனின் உரமும் போய்விட்டது ,எளிதில் நோய் தாக்கும் படி பூஞ்சையாக மாறிவிட்டார்கள் .
பண்டைய நாட்களில் இருந்தே நமது கிராம மக்கள் பருத்தி நூல்களுக்கும தாங்களாகவே நெய்த பருத்தி துணிகளுக்கும அவுரியைப் பயன்படுத்தி சாயம் தோய்த்தனர். அப்படிப்பட்ட ஆடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நமது நீலச் சாயத்துணி உலகப்பிரசித்தி பெற்றது .நமதுபருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கே வந்ததாக கூறுவார்கள்.
இன்னும் உலகில்இயற்க்கை சாயத்துக்கு மதிப்பிருக்கிறது ,நாம் தான் சந்தோஷமாக நமது இயற்க்கை செல்வங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு ,செயற்கை சாயங்களை பயன்படுத்தி தோல் வியாதிகளில் சிக்கித் தவித்து வருகிறோம்
நீலச் சாயம் எடுப்பதற்காக வங்காளத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் அவுரிச் செடியை கட்டாயப்படுத்திப் பயிரிடச் செய்தனர். அதுதான், இந்திய விவசாயம் பணப்பயிரை நோக்கி வைத்த முதல் அடி.
அவுரிச் செடியில் இருந்துதான் நீலச் சாயம் தயாரிக்கப்படுகிறது. பருத்தித் துணிகளுக்கு அடர் நீல வண்ணச் சாயம் ஏற்ற அவுரிச் செடியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே இண்டிகோ ஏற்றுமதிப் பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இண்டிகோ ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.
அந்தக் காலத்தில் சிவப்பு, கறுப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களே சாயமிடுவதற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில், அவுரிச் செடியின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் நீலச் சாயத்துக்கு பெரும் கிராக்கி இருந்தது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூர் அம்மன் கோவில் கல்வெட்டு

ஆறகளூர் காமநாதேஸ்வரன் கோவிலில் உள்ள அம்மன் கோவில் கருவறையின் வெளிப்புறம் உள்ள கல்வெட்டு

தம்பிரான்
தோழன் சதா
 சேவை  உ

aragalur-ஆறகளூரில் அகோரசிவம் முதலியார் மகன் என்னுடைய நாயனார்

சோழர்களின் குருக்களான அகோரசிவாசார்யார் முதலியோரே ஆகமங்களுக்கு பத்ததி எழுதியவர்கள்.
அகோரசிவாசார்யார் இரண்டாம் ராஜராஜனின் காலத்தில் இருந்தவர். அவர் ராஜகுருவாக இல்லாத போதிலும் அவர்தம் பத்ததியே அக்காலத்தில் விளங்கி வந்தது. அவர்தம் பத்ததியில் அவருடைய குருபரம்பரையைச் சேர்ந்தவர்கள் சோழபரம்பரைக்கு குருமார்களாக விளங்கிய செய்தி முழுவதையும் தொகுத்துத் தருகிறார். முதலாம் ராஜராஜனுக்கு ஈசான சிவமும் ராஜேந்த்ரனுக்கு சர்வசிவமும் இப்படி வரிசையாகப் பலர் இருந்தனர்.... Sankara Narayanan G
கி.பி.1375,7-12-1375 ஆம் ஆண்டு தேதிட்ட ஆறகளூர் கல்வெட்டில்
//திருகாமீசுரமுடைய நாயனார் கோவில் ஆறைநாயகர் திரு மண்டபத்தில் ஸ்ரீ ருத்திரர் ஸ்ரீ மாயேசுவரர்தேவகன்மியர் கோயில் கணக்கர் முதலிய அலுவலர்கள் அகோரசிவம் முதலியார் மகனுன் என்னுடைய நாயனாருக்கு  திருமடைவளாகத்துத் தெற்க்கு வீதியில் ஒரு மனையும் அதைச் சூழ்ந்த இடமும் கொடுத்ததை பற்றி குறிப்பிடுகிறது.//.

வியாழன், 17 செப்டம்பர், 2015

12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சமணக்கோயில் கல்வெட்டு கண்டெடுப்பு தினமணி செய்தி

தலைவாசல் அடுத்துள்ள ஆறகளூர் பகுதியில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோயில் இருந்ததற்கான கல்வெட்டை சனிக்கிழமை வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் என்பவர் கண்டெடுத்துள்ளார்.

தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் பழம்பெருமை வாய்ந்தது. இங்கு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருகாமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது. எட்டு பைரவர்களும் ஒரே கோயிலில் அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. மேலும் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கரி வரதராஜப் பெருமாள் கோயிலும் இங்குள்ளது. ஆறகளூருக்கு அருகே உள்ள தியாகனூரில் தமிழகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலையும் அதைவிட சற்று உயரம் குறைந்த மற்றொரு புத்தர் சிலையும் உள்ளன.
11-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநில மன்னர் மகதை மண்டலம் என்ற நாட்டை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் குறுநில மன்னவராகவும் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகவும் பணியாற்றியவர்.
இவரின் கல்வெட்டுக்கள் ஆறகளூர், கூகையூர், திருவண்ணாமலை, சிதம்பரம் மற்றும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது.
கடந்த வாரம் வரலாற்று ஆய்வாளர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆறகளூர் பகுதியில் வணிகக் குழு கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்த வணிகக்கல் 2 அடி உயரத்திற்கு மட்டுமே வெளியில் தெரிந்தது. இந்தக் கல்வெட்டின் கீழ் எழுத்துக்கள் இருக்கலாம் என்று எண்ணியதால் ஊர்ப் பொதுமக்கள், ஆறகளூர் மகதை மண்டலம் நண்பர்கள் என்ற வே.சந்தோஷ், ஆர்.வேலு, ர.அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழு கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், மங்கை வீரராகவன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டைத் தோண்டி எடுத்தபோது அதில் 8 வரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சமணக்கோயில் (ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால் கல்வெட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. அக்கோயில் மன்னன் பெயரிலும் வணிகர் பெயரிலும் இணைந்து பொன்பரப்பின பெருமாள் ஜிநாலயமான என்று அந்த சமண பள்ளிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வணிகக் கல்வெட்டு உள்ள இடத்தின் அருகே வயலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தின் சுடுமண் பொம்மையின் உடைந்த பகுதி கிடைத்துள்ளது. இப்போது விளைநிலமாக உள்ள இந்தப் பகுதி சங்க காலத்திலேயே மக்கள் வாழ்ந்த குடியிருப்பு என இதனால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு ஆது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 12-ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய மதங்கள் ஆறகளூரில் சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது என வரலாற்று ஆய்வாளர் பொன்.வெங்கடேசன் கூறினார்.

புதன், 16 செப்டம்பர், 2015

aragalur-கி.பி.12 ஆம் நூற்றாண்டை சார்ந்த (ஸ்ரீ கோயில்) சமண பள்ளி ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு


கி.பி.12 ஆம் நூற்றாண்டை சார்ந்த (ஸ்ரீ கோயில்) சமண பள்ளி ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டுபிடிப்பு---வணிக குழு கல்வெட்டை அகழ்தெடுத்தபோது எனக்கு கிடைத்த புதையல் இது

--------------------------------------------------------------------------------------
.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகழூர் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திருகாமநாதேஸ்வரர் ஆலயம் உள்ளது.எட்டு பைரவர்களும் ஒரே கோவிலில் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு மேலும் 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலும் இங்கு உள்ளது.ஆறகளூருக்கு அருகே உள்ள தியாகனூரில் தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு புத்தர் சிலையும் அதைவிட சற்று உயரம் குறைந்த மற்றொரு புத்தர் சிலையும் உள்ளது..5 அடி உயர புத்தர் சிலை ஒன்று 30 ஆண்டுகளுக்கு முன் திருடு போய்விட்டது
11ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற குறுநிலமன்னர் மகதை மண்டலம் என்ற நாட்டை ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தார்..இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் குறுநில மன்னராகவும் குலோத்துங்க சோழனின் படைதளபதியாகவும் பணியாற்றியவர்.இவரின் கல்வெட்டுக்கள் ஆறகளூர்,கூகையூர் ,திருவண்ணாமலை,சிதம்பரம் மற்றும் பழைய தென்னார்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைக்கிறது.
கடந்த வாரம் என்னால் ஆறகழூர் பகுதியில் வணிக குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அது பத்திரிக்கைகளில் செய்தியாக வெளிவந்தது.
இந்த வணிககல் 2 அடி உயரத்துக்கு மட்டுமே வெளியில் தெரிந்தது.
இந்த வணிக கல்வெட்டின் கீழ் எழுத்துக்கள் இருக்கலாம் என்ற என்ணியதால் ஆறகழூர் மகதை மண்டலம் நண்பர்கள் என்ற வாட்ஸப் குழு நண்பர்கள் பொன்.வெங்கடேசன், வே.சந்தோஷ்,R.வேலு,ர.அரவிந் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் அடங்கிய குழு கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் ,மங்கை வீரராகவன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டை தோண்டி எடுத்த போது
அதில் 8 வரிகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது..இந்த கல் உயரம் எட்டு அடி அகலம் ஒன்றரை அடி தடிமன் ஆறு இஞ்ச் அளவுடையது
அந்த கல்வெட்டை கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் படித்து..படி எடுத்தார்
சென்னை கல்வெட்டு ஆய்வாளர்கள் பேராசிரியர் அய்யா Rajagopal Subbiah Padmavathy Anaiappan அம்மா அவர்களால் கல்வெட்டு படிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது..கல்வெட்டில் உள்ள வாசகங்கள்
 12 ஆம் நூறாண்டில் இருந்த மகதை பெரு வழியின் தற்போதைய தோற்றம்
 பழைய பானை ஓடுகள்

 அகழ்ந்து எடுக்கப்படும் முன் நாற்பத்தெண்ணாயிரவர் வணிக குழு கல்வெட்டு
 தியாகனூர் தியாமண்டபத்தில் உள்ள புத்தர்
 ஆறகழூரில் உள்ள சமண தீர்த்தங்கரர்
 சங்க கால சில்லி-ஆறகழூர்

 மகதை மண்டலத்து மன்னர் பொன்பரப்பின வானகோவரையன்
 சமண தீர்த்தங்கரர்- ஆறகழூர்


 சங்ககால கறுப்பு நிற சில்லி-ஆறகழூர்

 சுடுமண் பொம்மை-ஆறகழூர்

 செல்வன் சிவத்தொண்டன் ஆறகழூர்

 வெள்ளைக்கல் சமண அருகர்

 வணிககுழு  கல்வெட்டை மீண்டும் நான் நிறுவிய பின்

 வெள்ளைக்கல் சமணர்-அருகர்-ஆறகழூர்

 வணிக குழு கல்வெட்டு-சமண ஜிநாலயம் இருந்ததற்கான ஆதாரம்
 வணிக குழு கல்வெட்டுடன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்(நான்)
 பொன்பரப்பின வானகோவரையர்
 தியாகனூர் புத்தர்
பானை ஓடு

1.ஸ்வஸ்திஸ்ரீ இந்த2.ஸ்ரீ கோயில் பொன்3.பரப்பின பெருமாள்4.ஜிநாலயாமான5.நாற்பத்தெண்ணா6.யிரப்பெரும்பள்ளி7.நாற்பத்தெண்ணா8.யிரவர் ரக்ஷை

ஆறகளூர் அருகே உள்ள தியாகனூரில் பௌத்தம் தொடர்பான புத்தர் ஏற்கனவே உள்ளது. கூடுதலாக சமணக் கோயிலும் இருந்த செய்தி இக்கல்வெட்டால் அறியக் கிடைக்கிறது. சமணக்கோயில்(ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால்
கல்வெட்டுள்ள இடத்தில் எற்படுத்தப்பட்டது. அக்கோயில் மன்னன் பெயரிலும் வணிகர் பெயரிலும் இணைந்து'பொன்பரப்பின பெருமாள் ஜிநாலயாமான என்று அந்த சமணபள்ளிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
.
இதுவே இந்த கல்வெட்டில் உள்ள செய்தி ஜினாலயம் என்பது மிகப்பெரிய சமண கோயிலை குறிக்கும்
இந்த கல்வெட்டு ஆறகழூரை ஆண்ட பொன்பரப்பின மகதை பெருமாள் என்பவரால் பொறிக்கப்பட்டுள்ளது. சமணக்கோயில்(ஜிநாலயம்) நாற்பத்தெண்ணாயிரவர் என்ற வணிகக் குழுவினரால் இந்த சமணப்பள்ளி 
கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்
மேலும் இந்த இடத்துக்கு அருகே 6 அடி உயத்தில் புத்தரை போன்ற தோற்றமுடைய இரண்டு சிலைகள் இருந்ததாகவும்அச்சிலைகளின் தலையில் ஒரு கூடையை கவிழ்த்தது போன்று தோற்றம் இருந்ததாகவும் அதை தோட்டி சிலை,,தோட்டிச்சி சிலை எனவும் ஊர் மக்கள் அழைத்து வந்ததாக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள்.இது அங்கிருந்து அழிந்து போன சமண ஜிநாலத்தில் இருந்த சிலைகளாக இருக்கலாம்.இந்த சிலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த கல்வெட்டு இருந்த இடம் 12 ஆம் நூற்றாண்டில் மகதேசன் பெருவழி காஞ்சிபுரம் என்ற பெருவழி பாதையில் அமைந்துள்ளது..மகதேன் பெருவழி காஞ்சிபுரம் என்ற மைல்கல் ஆறகளூர் திருகாமநாதேஸ்வரன் கோயிலில் இருந்தது.இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
மேலும் ஆறகழூர் காமநாதேஸ்வரன் கோவிலில் 1207ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் ஆறகளூரை சேர்ந்த செல்வனான சிவதொண்டன் என்பவர் 5,000 காசுகளை கொடையாக வழங்கியுள்ளார் அதில் திருப்பள்ளிதாமம் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த திருப்பள்ளிதாமம் என்பது சமணபள்ளிகளுக்கு வழங்கும் கொடையை குறிக்கும்.
திரு காமநாதேஸ்வரர் கோயிலில் வெள்ளைக்கல்லால் ஆன ஒரு சமணர்(அருகர்) சிலையும் ,உலோகத்தால் ஆன ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலையும் உள்ளது..இது வணிககுழு கல்வெட்டின் அருகே இருந்து அழிந்து போன சமணபள்ளி ஜிநாலயத்தில் இருந்த சிலைகளாக இருக்கலாம்.
மேலும் இந்த வணிக கல்வெட்டு உள்ள இடத்தின் அருகே உள்ள வயலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள் காணப்படுகிறது..2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத்தின் சுடுமண் பொம்மையின் உடைந்த பகுதி, பெண்கள் விளையாடும் சில்லிகள் கிடைத்துள்ளது..இப்போது விளைநிலமாக உள்ள இந்த பகுதி சங்ககாலத்திலே மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதி என இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.12ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் சைவம்,வைணவம்,பெளத்தம்,சமணம் ஆகிய மதங்கள் ஆறகளூரில் சிறப்பாக இருந்ததை அறிய முடிகிறது.
மேலும் தொல்லியல் துறையினர் ஆராய்ந்தால்மேலும் பல விவரங்கள் கிடைக்க கூடும் .
என் ஊரின் பெருமையை நான் உணர்ந்த மகத்தான தருணம் இது

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

aragalur-ஆறகளூர் சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு

ஆறகளூர் சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு

ஆறகழூர் சித்திரமேழி வணிக குழு கல்வெட்டில் இன்னும் ஒரு குறியீடு என்னவென்று அறியப்படவில்லை...ஒரு அம்புக்குறிக்குள் இருந்து வரும் மனிதன்(அ)தெய்வம்..இது என்னவாக இருக்க கூடும்..?சித்திரமேழி வணிக குழு பற்றி சில தகவல்கள்


----------------------------------------------------------
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு கண்டுபிடிப்பு
கி.பி 11,12 ஆம் நூற்றாண்டுகளில் மகதை நாடு என்ற சிற்றரசின் தலைநகராய் ஆறகளூர் இருந்துள்ளது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற வாணர் குலமன்னன் சோழ அரசர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் இந்த நாட்டை ஆண்டு வந்துள்ளார் .அவர் காலத்தில் மகதேசன் பெருவழி காஞ்சிபுரம் என்ற பெருவழி ஆறகளூரில் இருந்துள்ளது.அதற்க்கு ஆதாரமாய் மகதேசன் பெருவழி காஞ்சிபுரம் என்றமைல்கல் ஆறகளூர் காமநாதேசுவரர் ஆலயத்தில் இருந்தது,அது இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.இந்த மகதேசன் பெருவழியில் 12ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்து வந்த சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பேராசிரியர் திரு இராஜகோபால் அய்யா இது சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு என உறுதி செய்துள்ளார்
வணிக குழு கல்வெட்டு
இடைக்கால இந்தியாவில் பல்வேறு தொழிற்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியர் என்ற பட்டு வணிகர்கள், நாட்டுச்செட்டி போன்றோர் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியர், திருப்பத்தூர் பகுதியில் ஐநூற்றுவர் ஆகிய வணிகப் பிரிவினர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை ஏராளமாகக் கிடைக்கின்றன.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பிரான்மலை (இராமநாதபுரம் மாவட்டம்), சர்க்கார் பெரியபாளையம், கொங்குநாட்டான் புதூர் (பொள்ளாச்சி) ஆகிய ஊர்களில் தென்னிந்தியா முழுவதும் இருந்து வந்த வணிகக் குழுவினர் வெட்டி வைத்த கல்வெட்டுகள் உள்ளன.
சித்திரமேழி பெரிய நாட்டார் சிற்பம்.
மேழி என்பது கலப்பையைக் குறிக்கும். சித்திரமேழி = அழகிய கலப்பை. நாட்டார் என்னும் உழவர் குடியினர் பலர் தங்களுக்குள் ஒரு குழும அமைப்பை ஏற்படுத்தி அதை பெரிய நாடு, பேரிளமை நாடு என்ற பெயரில் முன்னிருத்தினர். இது 11ஆம் நூற்றாண்டு அளவில் தொடங்கியது. பின்னர் வணிகர் ,கம்மாளர்களும் இதனில் இணைந்தனர். இவர்கள் தங்களைப் பூமி புத்திரர் என்று அழைத்துக் கொண்டனர்.
சித்திரமேழியைத்ம் தெய்வமாகவும் கொண்டு வழிபட்டனர்
இதில் காணப்படும் குறியீடுகள்:-
.இச்சிற்பத்தில் பூதேவி சாமரங்கள் இடையே காட்டப்பட்டு கண்ணாடி,கலப்பை,மேழி,குத்துவிளக்குகள்,சம்மட்டி, சுத்தியல்,குறடு , முக்கலி மீது பூர்ண கும்பம் ,குத்துவாள்,ஆகியவையும் உள்ளன.
// கும்பத்திலிருந்து வெளிவரும் தெய்வம் ஆய்வு செய்யப்படவேண்டும்///???????????
தென்னிந்திய வணிக குழுக்கள் மட்டுமே அரசர்களைப்போல தனக்கென ஒரு படையை வைத்துக்கொள்ளவும், தனியாக கல்வெட்டுக்கள் பொறித்துக்கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனர்