சனி, 24 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை மரபுநடை

#ஆத்தூர்கோட்டைமரபுநடைஅக்டோபர்9

இன்றைய நிலையில் சமவெளியில் தமிழ்நாட்டில் இருக்கும் கோட்டைகளில் அழகும் சிறப்பும் வாய்ந்த கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. இது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது..இதற்கான அறிவிப்பு கோட்டைக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது..பழுதடைந்த கட்டிடங்களையும் கட்டுமானங்களையும் தொல்லியல் துறை ஓரளவு சரி செய்து வருகிறது..
10 ஆம் நூற்றாண்டு முதலே ஆற்றூர் என்று அழைக்கப்பட்டுள்ளது..மைசூர் ஆட்யின் போது அனந்தகிரி என கொஞ்சகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது..தற்போது ஆத்தூர் என்று அழைக்கப்படுகிறது...
ஆத்தூர் வசிஷ்டநதியால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது..
ஆற்றுக்கு கிழக்கில் இருந்து தெற்காக பரவியுள்ள பகுதி புதுப்பேட்டை..பழையப்பேட்டை,ராணிப்பேட்டை
ஆற்றுக்கு வடக்கே கோட்டையும் முள்ளுவாடி(முல்லைவாடி..?) பகுதியும் உள்ளது..இந்த முல்லைவாடி பகுதியில் கோட்டையில் பணிபுரிந்த அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் குடியிருந்ததாய் ஓர் தகவல் உண்டு
ஆத்தூர் கோட்டை சதுரவடிவில் அமையப்பெற்று புற அரண் கட்டுமானங்கள் ..மதில்சுவர் தொடர் வளைந்து திரும்பும் முனைகளிலும், மதிலுக்கு ஒட்டினார் போல் உள்ளது.. புற அரண்கள் வட்ட வடிவ உருண்டை கட்டுமானங்களாக உள்ளது..
இந்த கோட்டையை கட்ட கற்கள் அருகிலிருந்த கல்வராயன் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்..
கோட்டைக்குள் இதுவரை இரண்டு தானிய கிடங்குதான் உள்ளது என நினைத்திருந்தேன்...ஆனால் மூன்றாவதாய் ஓர் தானிய கிடங்கு உட்புறமாக முழுமையாய் நல்ல நிலையில் இருப்பதை நேற்றைய கள ஆய்வில் கண்டேன்..
கோட்டையை சுற்றிலும் ஆற்றின் இரு கரையிலும் நிறைய கோவில்கள் உள்ளன..
காளியம்மம்,செல்லியம்மன்,கைலாசநாதர் கோயில், மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும்
கோட்டைக்குள் காயநிர்மலேஸ்வரர்( திருமேற்றளி நாயனார்) கோயில்,பெருமாள் கோயில்,விநாயகர் கோயில் போன்றவை உள்ளன..
ஆறகழூர் வெங்கடேசன் பொன்





வியாழன், 22 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் வசிஷ்டநதி எனப்படும் நிவா நதி

என்று மாறும் இந்த நிலை..???
-------------------------------------------------------
எனக்கு 12 வயசு இருக்கும்போது ஆறகழூர் வசிஷ்டநதியில்(நிவா நதி) தண்ணி பளிங்கு மாதிரி அவ்வளவு வெள்ளையா தெளிவா ஓடும்..ஆறு முழுக்க மணல் நிறைந்திருக்கும்....
நாங்க அந்த மணலில் விளையாடிவிட்டு ஆத்து தண்ணியில் ஆசை தீர ஆனந்தமா குளிப்போம்...
ஆத்து மணலில் ஊத்து தோண்டி தண்ணி குடிப்போம்...
நேத்து ஆத்தூர் கோட்டைக்கு போக வசிஷ்டநதியை கடந்தபோது ஆறு சாக்கடையா மாறிப்போயிருந்தது..சேறும் அதில் புரளும் பன்றிகளுக்கும் புகலிடமாய் இருந்தது...எங்குமே மணல் காணப்படவில்லை....
ஆறுகளையும் ஓடைகளையும் முறையாய் பராமரிக்காமல் கழிவு நீர் செல்லும் சாக்கடையாய் மாற்றிவிட்டோம்....
இப்பவே குடிநீரை காசுகொடுத்து வாங்கும் நிலைக்கு வந்திட்டோம்...வருங்காலத்தில் காசு கொடுத்தால் கூட நல்ல குடிநீர் கிடைக்குமா...?
ஆறகழூர் வெங்கடேசன் பொன்



திங்கள், 19 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை மரபுநடை பயணம்

#ஆத்தூர்கோட்டைமரபுநடைஅக்டோபர்9
ஆத்தூர் கோட்டையில் உள்ள காயநிமலேஸ்வரர் கோயில் 13 ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டில்
திருமேற்றளி உடைய நாயனார் கோயில் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த கோயிலில் மொத்தம் 5 கல்வெட்டுக்கள் காணப்படுகிறது....
இதில் காலத்தால் மிகவும் பழமையானது
10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் கோப்பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டாகும்
அடுத்து 13ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலநகராக கொண்டு ஆத்தூரை ஆண்ட வாணகோவரையரின் கல்வெட்டு உள்ளது..
அடுத்து 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசின் மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன...
இப்போது உள்ள கோட்டை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது...இதுபற்றிய கல்வெட்டுக்கள் எதுவும் கோட்டைக்குள் இல்லை...
பேளூர் செக்கடிப்பட்டி கல்வெட்டு மட்டுமே கோட்டையை பற்றி பேசுகிறது..லெட்சுமணநாயக்கர் கோட்டையை கட்டினாரா..?அல்லது சீரமைப்பு செய்தாரா என்பது ஆய்வுக்கு உரிய ஒர் விசயம்
ஆறகழூர் வெங்கடேசன் பொன்




சனி, 17 செப்டம்பர், 2016

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் காமநாதகோவை

காமநாதகோவை

சேலம்  மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் திருகாமீசுரமுடையநாயனாரின் புகழை சொல்லும் 12,13 ஆம் நூற்றாண்டை சார்ந்த காமநாத கோவை என்ற பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடியை 1940 ஆம் ஆண்டு வாக்கில் சின்னசேலத்தில் ஒரு மடத்தில் இருந்து பெற்று கூகையூரை சேர்ந்த தமிழ் அறிஞர் திரு அடிகளாசிரியர் அவர்கள் தொகுத்து காமநாத கோவை என்ற நூலை 1947 ஆம்  ஆண்டு ஆறகழூரை சார்ந்த நாட்டர் குடும்பத்தை சார்ந்தகாமநாத மூப்பர்





 மூலம் வெளியிட்டார்....
    கடந்த 2 வருடங்களாக அந்த நூலை நான் தேடி வருகிறேன்...கிடைக்கவில்லை...சில நாட்களுக்கு முன் ஆறகழூரை சார்ந்த சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தில் பணியாற்றும் அண்ணன் ஆறகழூர் மு.கன்ணன் அண்ணா அவர்கள் அதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தார் ..
     நமது குழுவில் உள்ள அய்யா திரு கணேசன் அய்யாவிடமும் அதன் பிரதி இருப்பதாய் அறிந்தேன்...
       காமநாத கோவையை மின் நூல் வடிவில் அனைவரும் அறிந்தால் மகதை மண்டல வரலாறு வெளியாக ஏதுவாகும்
     இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை சொல்லுங்க சான்றோர் பெருமக்களே..

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

attur-ஆத்தூர் கோட்டை

இன்றைய தேடலில் கிடைத்த பொக்கிசம்
-----------------------------------------------------------------
காலை 6 மணி சைக்கிள் மெல்ல உருண்டுகொண்டு சென்றது...உடற்பயிற்சிக்காக ஓட்டிய சைக்கிள் வேகம் எடுக்கவில்லை..ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்...கால்கள் பெடல்களை மிதித்துகொண்டும் பார்வை சாலையை நோக்கி இருந்தாலும் மனம் என்னவோ வரலாற்றை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது...
கோட்டைக்கு போலாமா..?
எங்கிருந்து குரல்வருது...!சுற்றும் முற்றும் பார்த்தபோது யாருமில்லை..
ஓ..மைண்ட்வாய்ஸ்சுன்னு நெனைச்சி நான் தான் சத்தமா பேசிட்டேன் போல :-)
சைக்கிள் கோட்டையை நோக்கி விரைந்தது...
வசந்த மண்டபத்தின் அருகே உள்ள வீடுகளில் விசாரிக்க துவங்கினேன்
ஏங்க இங்க எதாவது பழங்கால பொருட்கள் இருக்க..?
நீங்க யாரு..?
ஏங்க 10 நாள் முன்பு ஊரும் உணவும் நிகழ்சிக்காக வந்தேனே...
ஓ நீங்களா..!!!1
நிகழ்சி நல்லாருந்திசி..கோட்டைய நல்ல காட்டிருந்தாங்க
எங்க நன்றியையையும் மகிழ்சியையும் Madona Janani க்கு சொல்லிடுங்க....எங்க அப்பா கூட கோட்டையை பத்தி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்...ஆனா இப்ப அந்த புத்தகம் ஒண்ணு கூட இல்லை..
எப்படியாவது ஒண்ணு எனக்கு வேணுமே...
சரிங்க அப்பாகிட்ட கேட்டு பாக்கிறேன்..
என்கிட்ட ஒரு கல்லுதான் இருக்கு ஆகுமான்னு பாருங்க...
வாவ்..வாவ்....சூப்பர்....இது கல் பீரங்கி குண்டுங்க..
ஓ..அப்படியா..????
நாங்க 10 வருசம் முன்பு இங்க வீடுகட்ட குழி தோண்டியபோது 3 பெரிய பானை (முதுமக்கள்தாழி)கிடைச்சுது அது எடுக்கும்போது உடைஞ்சி போச்சி...அதுக்குள்ள எலும்பு ,ஊசி எல்லாம் இருந்திச்சி..
சூப்பரூஊஊஊஊஊ
அது எல்லாம் இருக்குங்களா..?
இல்லிங்க..அதையெல்லாம் அப்பவே தூக்கிபோட்டுட்டோம்...
அந்த ஊசி மட்டும் வச்சிருந்தோம்...பையன் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போனபோது தொலைச்சிட்டான்...
அச்சச்சோ.....எல்லாம் மிஸ்ஸாகுதே....நாமதான் ரொம்ப லேட்டு...
கல் பீரங்கி குண்டை மட்டும் பாத்த திருப்தியோட திரும்பி 
சூடா இரு இஞ்சி டீ குடிச்சிட்டு வாக்கிங்கை முடித்தேன்







ஆத்தூர் கோட்டையில் கல் பீரங்கி குண்டு

புதன், 7 செப்டம்பர், 2016

salem சேலம் வேம்படிதாளம் புதிர்நிலை









சேலம் அருகே வேம்படிதாவளம் என்ற இடத்தில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,வீரராகவன் அய்யா,சுகவனமுருகன் சார்,ஆசிரியர் கலைச்செல்வன்,காளியபன் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைபற்றி இன்றைய சென்னை தினமலர் பதிப்பில் செய்தி வெளிவந்துள்ளது
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2016/09/07/ArticleHtmls/07092016007002.shtml?Mode=1