சனி, 17 செப்டம்பர், 2016

aragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் காமநாதகோவை

காமநாதகோவை

சேலம்  மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் திருகாமீசுரமுடையநாயனாரின் புகழை சொல்லும் 12,13 ஆம் நூற்றாண்டை சார்ந்த காமநாத கோவை என்ற பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடியை 1940 ஆம் ஆண்டு வாக்கில் சின்னசேலத்தில் ஒரு மடத்தில் இருந்து பெற்று கூகையூரை சேர்ந்த தமிழ் அறிஞர் திரு அடிகளாசிரியர் அவர்கள் தொகுத்து காமநாத கோவை என்ற நூலை 1947 ஆம்  ஆண்டு ஆறகழூரை சார்ந்த நாட்டர் குடும்பத்தை சார்ந்தகாமநாத மூப்பர்





 மூலம் வெளியிட்டார்....
    கடந்த 2 வருடங்களாக அந்த நூலை நான் தேடி வருகிறேன்...கிடைக்கவில்லை...சில நாட்களுக்கு முன் ஆறகழூரை சார்ந்த சென்னை தமிழ் வளர்ச்சி கழகத்தில் பணியாற்றும் அண்ணன் ஆறகழூர் மு.கன்ணன் அண்ணா அவர்கள் அதை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தார் ..
     நமது குழுவில் உள்ள அய்யா திரு கணேசன் அய்யாவிடமும் அதன் பிரதி இருப்பதாய் அறிந்தேன்...
       காமநாத கோவையை மின் நூல் வடிவில் அனைவரும் அறிந்தால் மகதை மண்டல வரலாறு வெளியாக ஏதுவாகும்
     இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை சொல்லுங்க சான்றோர் பெருமக்களே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக