புதன், 13 ஜனவரி, 2016

kural-வாணகோவரையரின் கோயில் கலைப்பாணி மகதை மண்டலம்

வி.கூட்டுரோடு- வேப்பூர் சாலையில் பைக் சீறி பாய்ந்து கொண்டிருந்தது...மனமோ மகதை தேசத்தை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது..இந்த சாலை வழியாகத்தானே நம் மன்னர் பொன் பரப்பின வாணகோவரையன் எத்தனையோ முறை பயணித்திருப்பார் என்று என்ணியபடியே பயணித்தேன்..நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர்களை கவனித்தபடியே சென்றேன்....
குரால்...............
எங்க ஊரிலிருந்து வெறும் 13 கி.மீ தொலைவுதான்...ஆனா இதுவரை அங்கு போனதில்லை..ஊர் பெயர் பலகையை பார்த்தவுடன் பைக் நான் சொல்லாமலேயே அந்தப்பாதையில் வளைந்தது....
ஒரு சின்ன கிராமம்தான்..இயற்கை எழிலோடும் கொஞ்சும் புன்னகையோடும் என்னை வரவேற்றது....
எதிர்பார்த்தது வீண்போகவில்லை..பழமை மாறாமல் அப்படியே இருந்தது..எங்க ஊர் ராசா பொன்பரப்பின வாணகோவரயன்..மகதை மண்டல ராசா மகதைப்பெருமாள் கட்டிய கோயில் அப்படியே இருந்தது...ஆனால் ரொம்பவும் சிதைந்து போய்....
இதை கட்ட எம்மன்னர் எவ்வளவு உழைத்திருப்பார் எவ்வளவு பணம் செலவாயிருக்கும் எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்..ஆனால் இன்று வணங்குவோரின்றி சீந்துவாரின்றி பாழடைந்து கிடக்கிறது..
கோவில் சிலைகளும் கடவுள் சிற்பங்களும் கூட கொள்வாறின்றி பராமரிப்பின்றி அம்போ என நின்றன....
ஒரே ஒரு சின்ன ஆறுதல் அந்த கோவில் புணரமைப்புக்கும் வரலாற்றை பதியும் முயற்சியையும் அந்த ஊரைச்சார்ந்த தலமை ஆசிரியர் துரைசாமி அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்..அங்குள்ள 4 கல்வெட்டுக்களும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு சிறு நூலாக வரலாற்று மலராக ..போடப்பட்டுள்ளது...
கோவிலின் பெயர் திரு புவனேசுவரன் கோயில்
பாதி கற்றளியாகவும் பாதி செங்கல் தளியாகவும் உள்ளது..
இந்த கோயிலில் சிவலிங்கம்,காலபைரவர்,யக்ரீவர்,,லட்சுமி,சரஸ்வதி,சண்டிகேசுவரர்,மகாகணபதி,முருகன்,திரிபுவனேசுவரியம்மன்,தட்சிணாமூர்த்தி,வக்கரகாளியம்மன்(நிசும்பசூதனி..?),விஷ்ணுதுர்க்கை போன்ற சிலைகளும் உள்ளன..
இங்கு வாணகோவரையர் கல்வெட்டு மட்டுமே காணப்படுகிறது அதற்க்கு பின் வந்த பாண்டியர்,விஜயநகர பேரரசு,நாயக்கர்கால கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை..
மூன்றாம் குலோத்துங்கன்,மூன்றாம் ராசராசன் பெயர்கள் கல்வெட்டில் வருவதால் அப்போது அவர்கள் கீழ் மகதை நாட்டின் தலைநகராய் ஆறகளூரை கொண்டு ஆண்ட பொன்பரப்பின வாணகோவரையன் கட்டிய கோயில் இது என்று உறுதியாகிறது
வாணகோவரையனுக்கு பின் கட்டுமானமும் பராமரிப்பும் நடைபெறாததால் இது ஒரிஜினல் கலப்பில்லா வாணகோவரையரின் முத்திரை...இங்கு பொன் பரப்பின வாணகோவரையனின் சிற்பமும் ஓரிடத்தில் காணப்படுகிறது..
காக்க வேண்டிய பொக்கிசம் இது..