செவ்வாய், 9 மே, 2017

சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் -3


                       சேலம் மாவட்ட குறுநில மன்னர்கள் - 3



சேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் - 3
கெட்டி முதலிகள்
கெட்டி வம்ச அரசர்களின் தலைநகர் அமரகுந்தி.
ஆட்சிகாலம் கி.பி.1539 முதல் 1689 வரை 150 ஆண்டுகள் ஆகும்.
மதுரை நாயக்கர்களின் கீழ் இவர்கள் ஆட்சி இருந்தது.
சங்க காலம் முதலாகவே இந்த கெ(க)ட்டிகள் இருந்தார்கள் என தெரிகிறது.

வணங்காமுடி முதலியார், இம்முடி கட்டி, சீயாலக்கட்டி,இம்முடிகட்டி 2, வணங்காமுடி கொமாரக்கட்டி ஆகியோர் முக்கியமானவர்கள்.





தாரமங்கலம் இவர்களின் தலமையிடமாக இருந்துள்ளது.ஹெய்சாளர்கள் ,பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இப்பகுதியில் ஊர் தலைவர்களாக இருந்தவர்கள் இந்த கெட்டி முதலிகள் என வரலாற்று ஆய்வாள்கள் கருதுகின்றனர்.
மதுரை நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்கள் என்றழைக்கப்படு தாரமங்கலத்தை தலமையிடமாக கொண்டு கட்டிமுதலி என்ற பட்டத்துடன் ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களின் ஆட்சி பகுதி தாரமங்கலம், ஓமலூர், பவானி,ஆத்தூர், ஆறகழூர் போன்ற பகுதிகள் இருந்துள்ளன.
இவர்களின் கல்வெட்டுக்கள் ஆறகழூர்,ஓமலூர், தாரமங்கலம், பவானி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
ஆறகழூர் வெங்கடேசன் பொன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக