புதன், 27 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7
காமக்காபாளையம்
வீரராகவன் ஐயாவும் நானும்

காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர் Tvenkatesan Tvenkatesan எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம்
நண்பர்களுடன்
தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம் 26 செ.மீ. அகலம் உள்ள இடத்தில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அருகே தானம் கொடுத்தவரின் உருவம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அச்சிற்பத்தின் முகம் கைகள் சிதைக்கப்பட்டுள்ளது
கல்வெட்டு
.
விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது ஆறகழூர் மகதை மண்டலம் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மகதை மண்டலத்தில் உள்ள ஓர் ஊராக காமக்காபாளையும் இருந்துள்ளது.
கி.பி. 1490 ஆம் ஆண்டு தை மாதம் 5 ஆம் தேதி இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
தானம் செய்தவர்
கல்வெட்டு சொல்லும் செய்தி
காமக்காபாளையம் கிராமத்தில் அப்போது வசித்த செல்லப்பிள்ளை என்பவரின் மகன் நமச்சிவாயம் பிள்ளை என்பவர் தான் சுத்தகிரயமாக வாங்கிய 15 குழி நிலத்தை இவ்வூரில் உள்ள அருணாசலேசுவர சுவாமியின் விசேச கட்டளை பூசைக்கு ஆகும் செலவுக்காக தானமாக கொடுத்துள்ளார். இந்நிலத்தில் வரும் வருவாயை கொண்டு இந்த பூஜையை தங்கு தடையின்றி தொடர்ந்து நடத்தி வர வேண்டும் . இந்த தர்மத்தை யாராவது அழிவு செய்தால் அவர்கள் காசியிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் பொதுவாக தானத்தை அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என வரும். இங்கு காசியிலே என்று வருவது குறிப்பிடதக்கதாகும். காசிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் உள்ள கிணறும் காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் நிலங்கள் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழியாகவே விற்கப்பட்டன . இந்த கல்வெட்டில் 15 குழி நிலம் சுத்தகிரயமாக வாங்கப்பட்டதாக குறிப்பிடுவது சிறப்பான செய்தியாகும்.
இந்த கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் கி.பி. 1751 ஆம் ஆண்டை சேர்ந்த இம்மடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மைசூர் மன்னரின் கன்னட மொழி கல்வெட்டு இதே குழுவினரால் சென்ற ஆண்டு கண்டறிப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் காமக்காபாளையம் வரலாற்று சிறப்பு பெற்ற ஊர் என்பதை அறியலாம்.
மைப்படி
காமக்காபாளையம் கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் கருவரை முன் மண்டபத்தின் தென்புற சுவரில
காலம்:
பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டு
செய்தி:
அருணாசலேசுவர சுவாமி விசேச கட்டளை
செலவுக்காக இவ்வூரை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன்
நமச்சிவாயபிள்ளை சுத்த கிரயமாக 15 குழி நிலம் வாங்கி
கொடுத்த செய்தியை தெரிவிக்கிறது.
கோயிலின் முன்புறம்
கல்வெட்டு பாடம்:
1. ஆறுமுக ஸ்வஸ்திஸ்ரீ விஜய வருடம் தைமாதம் ஸ்ரீ
வாகன
2. சகாப்தம் 1412 கலியுகம் 4871 இதன்மேல் செல்
3. லா நின்ற விக்குறிதி வருடம் தை மாதம் 5
காமக்காபாளையத்திலிருக்கும்
ஸ்ரீ அருணாசலேசுவர
4. மிசதி இவ்வூரிலிருக்கும் செல்லப்பிள்ளை புத்திரன் நமச்சிவாயபிள்ளை தான் சாசனம் பண்ணி கொடுத்
5. தேன் . இந்த கிராமத்திலே பட்ட விருத்தி மானியத்தில் இப்படி யிசையில் குகிரினி ஏ(யே)
6. தகதால் பூற்வமாக சுத்த கிரயம்யாக வாங்கினது குழி 15 இந்த குழி
7. ஸ்ரீ அருணாசலேசுவர சுவாமி விசேஷ கட்டளை செலவுக்கு தான் சாசனம் கொடுத்தேன்.
8. இந்த தர்மம் அகுதம் பண்ண பெற காசியிலே காராம் பசுவு கொன்ன பாவத்திலே போ
9. வாராகவும். தர்மம் - - - - விதமாக செந்திர சூரியாதியள சாஷி தெவிக்காய்

#ஆறகழூர்பொன்.வெங்கடேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக